Wednesday 5 February 2014

ஓ நயாகராவே பனியாக உறைந்ததேன்..!!!





ஓ நயாகராவே 
அந்தப் பாறை முகடுகளில் 
பாட்டொன்றை 
பாடிக் கொண்டிருந்தாயே 
இன்று 
மௌனமானதேன்...??? 

மௌனப் போராட்டமா..??? 
பணியை விடுத்து 
படர்ந்துள்ளாய் 
வெண்ணிற கொடியோடு..!!! 

ஓய்வின்றி ஓடி ஓடி 
களைத்து விட்டாயோ..? 
இன்று 
ஓடாமல் ஓய்வெடுக்கிறாய்..!!! 

பாய்ந்தோடும் நீர்ப் படலம் 
பனிப் பூ பூங்காவாகி 
பாய்ந்தோடாமல் நிற்கிறதே..!!! 

எந்த கறையான் 
உன் பளிங்கு உடலில் 
பனிப் புற்றெழுப்பியது..??? 

மலையில் முக கண்ணாடியாக 
தொங்கி கொண்டிருந்தாயே 
இன்று 
பனிக் கண்ணாடியாக சிதைந்ததேன்..!! 

தொட்டால் கலைந்துவிடும் 
நீர்க் கோலமே - இன்று 
கலைந்து பனிப் புள்ளிகளானாயே..!!! 

பசியறிந்து பாலுட்டும் 
தாயாக 
வனம் வயலுக்கெல்லாம் 
பாய்ந்தோடி பாலுட்டினாயே 
இன்று 
பனியாக உறைந்ததேன்..??? 

அருவியாக வீழ்ந்து 
ஆறாக எழுச்சியடைந்து 
அழகாக எடுத்துரைத்தாய் 
வீழ்ச்சியில் எழுச்சியென்று 
இன்று 
நீயே வீழ்ந்ததேன்...? 

திரவ தேக தேவதையே 
அகத்திலென்ன தீராத சோகமா ? 
நேற்று வரை 
வெண் புகையாக புகைந்து 
இன்று 
பனியாக உறைந்து விட்டாய் .!!!! 

ஓ அழகியே 
எழுந்து வா...!!!


--sutha--

No comments:

Post a Comment