Wednesday 5 February 2014

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு..!!!



வரலாற்றை தின்று செறித்த 
கறையானுக்கு தெரியும் 

கன்னித்தமிழில் எழுதியதால் 
பனை ஓலையும் 
கற்கண்டாய் இனித்ததென்று..!! 

மறத் தமிழனை கண்டால் 
மதக்களிறு மண்டியிடும் 
வேங்கை வெகுண்டோடுமென்று..!!!! 


அன்று 
வாளும் உறையுமாய் தமிழர்கள் 

அதோ அந்த இமயம் 
தமிழ்க் கொடியை தாங்கி நின்றது 
இதோ இந்த வங்காள விரிகுடா 
தமிழெல்லையாய் படர்ந்திருந்தது..!!!! 

இல்லையென்ற குறையின்றி 
அள்ளி கொடுத்து வாழ்ந்தனர்..!!! 


இன்று 
இரைத் தேடிப் போன 
பறவைகளைப் போல பிரிந்துள்ளோம் 
நம் கோட்டையிலே 
நரிகள் ஊளையிடுகிறது...!!! 

ஓநாய்கள் வேட்டையாடுகிறது 
தமிழ் சிங்கங்ககளை 
பூனைகள் விரட்டுகிறது 
புலியை விரட்டிய மங்கையரை..!!! 

தங்கமது மண்ணில் 
மறைந்துள்ளதைப் போல 
மக்களோடு மக்களாய் 
உலகெங்கிலுமுள்ள தமிழர்களே..!!! 

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு 
மறந்தாயோ ? 

அணுக்களிரண்டு சேர்ந்ததால் 
அண்டத்தை ஆளும் 
கதிரவன் தோன்றினான் 

தமிழர்கள் ஒன்று சேர்ந்தால் 
அகிலத்தையே ஆளலாம்..!!! 

அலை 
கூடி .. கூடி .. 
வந்ததால் உடைகிறது கரை 

தமிழர்கள் கூடினால் 
எதிரிகளின் 
இடுப்பொடித்து அடுப்பெரிக்கலாம்..!!!! 

காற்று கைகோர்த்து 
ஓடி.... ஓடி.... 
வளைக்கிறது மரத்தை 

தமிழர்கள் கைகோர்த்தால் 
தமிழீழம் பிறந்து 
ஈழத்தில் கண்ணீர் மறையும்..!!! 

பாதரசம் போல 
புறத்திலே சிறு துளியாயினும் 
அகத்திலே 
உச்ச உஷ்ணத்திலும் 
உருகாத உலோகமான தமிழர்களே..!!! 

ஒன்று சேராத துளிகள் 
குளத்தை நிரப்புவதில்லை 
ஒன்று கூடுங்கள் இல்லையன்றால் 
நாளை 
நம் குஞ்சுகள் வாழ கூடு இருக்காது..!!!

--sutha--

4 comments:

  1. ஒற்றுமையைப் பற்றி அற்புதாமாக சொல்லியிருக்கிறீர்கள் சகோதரி. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தங்களின் வலைப்பூவில் follower widget இல்லாமல் இருக்கிறது. இந்த இணையத்தளத்திற்கு சென்று, follower widget வைக்கும் முறையைப் பார்த்து, உங்கள் வலைப்பூவில் வைத்தீர்களேயானல், மிகவும் எளிதாக உங்களை பிந்தொடர முடியும்.

    http://www.southernspeakers.net/2013/02/adding-followers-gadget-in-blogger-post.html

    ReplyDelete
  3. இன்னுமொரு வேண்டுகோள்:

    In settings -> Post comments -> Show word verification -> No

    என்று மாற்றுங்கள்...

    ReplyDelete
  4. ஒன்று சேராத துளிகள்
    குளத்தை நிரப்புவதில்லை
    ஒன்று கூடுங்கள் இல்லையன்றால்
    நாளை
    நம் குஞ்சுகள் வாழ கூடு இருக்காது..!!!/

    அருமையான வரிகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete