Wednesday 5 February 2014

பத்மபூஷண் வைரமுத்து அய்யாவிற்கு வாழ்த்து..!!!



13-7-1953 அன்று 
பாண்டிய நாட்டில் பிறந்தது 
இந்த 
கள்ளிக்காட்டு இதிகாசம்..!!! 

தமிழை அரண்போலக் காத்து 
காலத்திற்கேற்ப 
உருமாற்றிக் உயிர்ப்பிக்க 

வள்ளுவன் இளங்கோவடிகள் கம்பன் 
பாரதி பாரதிதாசன் கண்ணதாசனென்று 
தமிழன்னை தோற்றிவிப்பாள் 
காலத்திற்கொரு புலவனை 
அந்தவரிசையில் இன்று வைரமுத்துவும்..!!! 

அவன் 
பூக்களின் புதல்வன் 
தாவரங்களின் தோழன் 
கருப்பு வைரம் 
சூரியனை செரித்தவன் 
புதுக் கவிதையின் ஆணி வேர்..!! 

தமிழின் காவலனே 
நீ 
கற்பனை சிறகேறி 
கனவுலகை அளந்தவன் 
தென்றலை துணைக்கழைத்து 
முக்காலத்திலும் சுற்றியவன் 
அலைகளின் முதுகேறி 
தொடுவானத்தை தொட்டவன்..!! 

உன் 
விரல் எழுதாத 
பாடு பொருளுண்டோ 
குரல் 
முழங்காத கவியுண்டோ..!!! 

இந்த 
காற்று மண்டலமெங்கும் 
ஒலிக்கிறது உன் கானம்..!!!! 

உன் 
காதல் கீதங்கள் 
இளைஞர்களின் தேசியகீதம் 
சோக கீதங்கள் 
கண்ணீருக்கு மருந்து 
தத்துவங்கள் 
வாழ்க்கையின் வழிகாட்டி..!!! 

மலர் அழகு 
அதில் தொடுத்த மாலை பேரழகு 
அதுப் போல 
தமிழ் சுவைமிக்கது 
அதில் நீ புனையும் 
சொல்லிலொரு புதுச் சுவையுண்டு 
கவியிலொரு அகமுண்டு 
கவித்தொகுப்பில் நூறு முகமுண்டு..!!! 

தமிழை நீ வளர்த்தாய் 
தமிழ் உன்னை வளர்த்தது 
அகவை அறுபதில் 
நாளை 
மணிவிழா கொண்டாடுமுனக்கு 
இன்றே 
மத்திய அரசு சூட்டியது 
பத்மபூஷணென்ற மணிமகுடத்தை..!!! 

நீ எழுதிய நூல்கள் 
வாங்கிய விருதுகளையெல்லாம் 
எண்ண முடியவில்லையே.. 
சொல் கவியே 
உன் வீட்டில் எத்தனை அலமாரி..!!!!! 

நீ 
ஞானம் அறிவு குணம் 
புகழ் பண்பிலெல்லாம் 
சூரியனைப் போல உச்சத்தில் 
நான் 
சூரியனுக்கு வாழ்த்தெழுதும் 
சூத்திரமறியா சிறுபிள்ளை ..!!! 

ஆதலால் 
புன்சிரிப்பு மாறாமல் 
புது வேகம் குறையாமல் 
புதுப்பாதை நிறைவோடு 
பல்லாண்டு வாழ்ந்திருக்க 
கவிப்பேரரசே உனை வாழ்த்தி 
தலை வணங்குகிறேன்...!! 


--sutha--

No comments:

Post a Comment