Monday 11 November 2013

பூவும் பெண்ணும் !!!



பெண் பூவே
நீ

அழகிலே ஆம்பல்
முல்லை முகமானவள்
காந்தள் கண்கள்
வள்ளி விழிகள் !!


புருவம் பசும்பிடி
கருவிள கன்னம்
பாதிரிப் பார்வை
செருந்தி செவ்விதழ் !!


நெய்தல் நெற்றி
தாழை தாடை
மாம்பூ மூக்கு
பற்கள் பயினி !!


செங்கொடுவேரி செவி
நாக்கு நறவம்
குருகிலை கழுத்து
கூவிளம் கூந்தல் !!


தொண்டை தணக்கம்
கரங்கள் காயா
மணிக்கட்டு மரவம்
வேரல் விரல்கள் !!


அகங்கை அடும்பு
புறங்கை பிடவம்
கைநகம் கைதை
உந்தூழ் உடல் !!


தாமரை தேகம்
தேமாம்பூ தோள்
நெஞ்சு நாகப்பூ
மணிச்சிகை மார்பு !!


இலவம் இடை
முதுகு மருதம்
தோன்றித் தொடை
கால்கள் காழ்வை !!


கருங்குவளை கனுக்கால்
கால்விரல்கள் காஞ்சி
பாதம் பாலை
தளவம் தசை !!


குரல் குரவம்
பேச்சு போங்கம்
நடையிலே நரந்தம்
கரந்தை கண்ணியம் !!


மௌனத்திலே மௌவல்
கோங்கம் கோவம்
ஞானயத்திலே ஞாழல்
புன்னகையிலே புன்னை !!


வெட்கத்தில் வெட்சி
குணத்திலே குருக்கத்தி
பண்பிலே பாங்கர்
கருணையிலே காந்தள் !!


கொள்கையிலே கொன்றை
தூய்மையிலே தும்பை
வீரத்திலே வேங்கை
பாசத்திலே பகன்றை !!


மென்மையிலே அனிச்சம்
நம்பிக்கையில் நந்தி
அறிவியலிலே ஆத்தி
குறிஞ்சி குலத்தவளே !!


சேவைச் செம்மல்
திலக திருமங்கை
வாகைப் பூ சூடி
வாழையாகி குலம் காக்கும்
குலமகள்!!

--Sutha--

No comments:

Post a Comment